Home » » அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர்

அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர்

அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள சிறந்த புண்ணியஸ்தலங்களில் ஒன்றாகும். இதில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் சித்தி விநாயக விக்கிரகம் மிகவும் பழமை வாய்ந்தது.

அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள சிறந்த புண்ணியஸ்தலங்களில் ஒன்றாகும். இதில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் சித்தி விநாயக விக்கிரகம் மிகவும் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயில் இற்றைக்கு ஏறக்குறைய அறுபது வருடங்களுக்கு முன் பெரிய பிரக்ராசிரியார் என்று கொண்டாடப்பட்ட ஸ்ரீமான் விஸ்வநாதர் காசிப்பிள்ளை அவர்களால் திரும்பவும் புதிதாகக் கட்டுவிக்கப்பட்டு ஆங்கில வருடம் 1915 இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர்சித்தி விநாயக விக்கிரகம் இந்தியாவிலுள்ள தொண்டை நாட்டிலிருந்து யாழ்பாடியின் காலத்தில் அவரின் முதலமைச்சர் சேதிராயரின் வேண்டுகோளின் படி கச்சிக் கணேசையர் என்னும் பிராமணோத்தினரால் கொண்டு வரப்பட்டது. என்றும் அதுவே இப்போது அரியாலையிலுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் பிரதிட்டை செய்யப்பட்டிருப்பது போலும். என்று யாழ்ப்பாணச் சரித்திர நூலாசிரியருள் ஒருவரான ஸ்ரீமான் ஆ.முத்துத்தம்பிப்பள்ளை அவர்கள் கூறிப்போந்தார். (யாழ்ப்பாணச் சரித்திரம் பக்கம் 11)

யாழ்ப்பாடியின் காலம் கி.மு 2ஆம் நூற்றாண்டு சில சரித்திர நூலாசிரியர்கள் கூறி நிற்க வேறு சிலர் அதனை மறுத்து கி. பி 10 ஆம் நூற்றாண்டு என்று வரையறுத்துள்ளனர். பிந்தியோர் கூற்றிலிருந்து பார்த்தாலும் கச்சிக் கணேசையரால் கொண்டு வரப்பட்ட சித்தி விநாயகர் விக்கிரகம் இற்றைக்கு ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தில் பிரதிட்டை செய்யப்பட்டு விட்டது என்பதற்கு சந்தேகமே இல்லை. ஆனால் அது அப்போது பிரதிட்டை செய்யப்பட்ட இடம் எது என்பது திட்டவட்டமாகக் கூறுவதற்கில்லை. இப்போது அவ்விக்கிரகம் இருக்கின்ற அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலிலே அவ் இடம் எனச் சிலர் அபிப்பிராயப்படுகின்றனர்.

யாழ்ப்பாடியின் இராசதானி யாழ்ப்பாணமாய் இருந்தாலும் அவரின் முதலமைச்சர் சேதிராயரால் சித்தி விநாயகருக்கு ஓர் ஆலயம் கட்டுவிக்கப்பட்டமையாலும் அவ்வாலயம் யாழ்ப்பாண இராசதானியிலே அல்லது அதற்கு அயலிலே கட்டுவிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று துணிதல் பொருத்தமுடையதாகும்.

யாழ்ப்பாண நகரப்பகுதியிலெ அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலைப் போன்ற பழமையான வேறோர் சித்தி விநாயகர் கோயில் இல்லாமையாலும், அரியாலை சித்தி விநாயகர் கோயிலில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் விநாயக விக்கிரகத்தின் அங்க அமைப்புக்கள் யாவும் பழங்காலச் சிற்பங்களோடு ஒத்திருப்பதனாலும் கச்சிக் கணேசையராலும் கொண்டு வரப்பட்ட சித்தி விநாயக விக்கிரகம் அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் விக்கிரகமே எனத் துணிதல் சாலும்.

யாழ்பாடியின் பின் யாழ்ப்பாணம் சிலகாலம் அரசற்ற நாடாயிருந்து பின்னர் கி.பி 16 ம் நூற்றாண்டு வரையும் சிங்கை ஆரிய மன்னர்களாலும், ஈற்றில் சங்கிலி அரசனாலும் ஆளப்பட்டது. இக்காலத்தில் சைவசமயமும் சைவக்கோயில்களும் சிறப்புற்று விளங்கின. அதன் பின்னர் பறங்கியராலும் ஆங்கிலேயராலும் ஏறக்குறைய நான்கு நூற்றாண்டு காலம் ஆளப்பட்டது. சங்கிலி அரசனின் ஆட்சிக்குப்பின் அதாவது பறங்கியர் ஆட்சி ஆரம்பித்த போது சைவக் கோயில்கள் பெரும்பாலும் தரைமட்டமாக்கப்பட்டன. நல்லூரில் சிறப்புற்று விளங்கிய கைலைநாதர் கோயில் இருந்த இடம் தெரியாது அழிக்கப்பட்டதென்று சொல்லப்படுகின்றது. அக்காலத்தில் சித்தி விநாயகர் கோயில் இடிபடாது தப்பியிருப்பது எங்ஙனம்.

அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர்சங்கிலியன் போர் தொடுக்க மன்னாரிலிருந்து புறப்பட்டு வந்த பறங்கியரின் படை பூநகரியிலிருந்து வள்ளங்களிலின் மூலம் சாவகச்சேரியை அடைந்து நாவற்குழியில் இரவு தங்கி அடுத்தநாள் உப்பாற்றைக் கடந்து சுண்டிக்குழியிற்றங்கிப் போர் செய்ததென்று யாழ்ப்பாணச்சரித்திரம் கூறுகின்றது. (யாழ்ப்பாணச் வைபவ சோமுதி பக்கம் 95 பார்க்க) எனவே சித்திவிநாயகர் கோயில் பறங்கியர் சென்ற பாதையில் இருந்தமையால் அது பறங்கியர் அட்டூழியத்தினின்றும் தப்பியிருக்க முடியாது.

சங்கிலி மன்னன் மன்னாரிலிருந்த கத்தோலிக்கருக்குச் செய்த கொடுமைகளுக்குப் பழிக்குப்பழி வாங்காது விடமாட்டார்களென்று உணர்ந்த பிராமணர்களிற் சிலர் தத்தம் கோயில்களிலிருந்த விலையுயர்ந்த பொருட்களையும் விக்கிரகங்களையும் அப்புறப்படுத்தி விட்டு அதாவது சனநடமாட்டமில்லாத இடங்களில் மறைத்து வைத்து விட்டு தாமும் ஓடி ஒளித்திருப்பார்கள். அல்லது தமது தாய் நாடாகிய இந்தியாவுக்கே சென்றிருப்பார்கள். என்பதை சொல்லவும் வேண்டுமா? சித்திவிநாயகர் விக்கிரகமும் இவ்வாறே மறைக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கத்தாட்சியாக இப்பகுதியில் கர்ண பரம்பரையாகப் பேசப்பட்டு வரும் வரலாறு ஒன்றுள்ளது. அரியாலை நீர்நொச்சித்தாழ்வு என்று வழங்கப்படும் புண்ணிய பூமியில் மாடு மேய்த்து வந்த சிறுவர்கள் தாங்கள் கொண்டு சென்ற மாடுகளை மேயவிட்ட பின்னர் கூடி விளையாடுவது வழக்கம் என்றும் ஒருநாள் அவர்கள் விளையாடும் போது தற்செயலாகப் பற்றையொன்றினுள் சித்திவிநாயகர் விக்கிரகம் ஒன்றைக் கண்டெடுத்தார்கள் என்றும் அதன் பின்னர் அந்த விக்கிரகத்தை வைத்து சுவாமி விழளையாட்டை விளையாடி வந்தனர் என்றும் அதனை அறிந்த பெரியோர்கள் அவ்விடத்திலேயே சித்திவிநாயகருக்கு ஓர் கோயில் கட்டுவித்தார்கள். என்றும் பேசப்பட்டு வருவதே அவ் வரலாறு ஆகும்.

அரியாலை நீர்நொச்சித்தாழ்வு என்னும் புண்ணிய பூமியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் விக்கிரகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்ததென்றும் நமது முன்னோர்கள் அதனைப் பேணிப்பாதுகாத்துக் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்த வழிபட்டு வந்தார்கள். என்றும் அன்று தொட்டு இன்று வரை நித்திய நைமித்திய பூசைகளை ஆற்றி இஷ்ட காமிய மோட்சார்த்தங்களைப் பெற்று வந்தார்களென்றும் அப்பெருமானின் பேரருட்டிறத்தால் அரியாலையூர் எல்லா வகையிலும் சிறந்து விளங்குகிறது என்றும் சொல்லப்படுகின்றது.

சித்தி விநாயக

0 கருத்துகள்:

கருத்துரையிடுக