Home » » பெண் உரிமை எவ்வாறு பேணப்படுகிறது

பெண் உரிமை எவ்வாறு பேணப்படுகிறது

 தமிழ்ச் சமூகத்தில் பெண் உரிமை எவ்வாறு பேணப்படுகிறது என்பது ப
ற்றியதாகும். தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் உரிமை கால அடிப்படையிலும், உள் பிரிவுகள் அடிப்படையிலும் பெரிதும் வேறுபடுகிறது.

பண்டைத் தமிழகத்தில் தமிழகத்தில் பெண் உரிமைகள் ஓரளவு பேணப்பட்டது என்றும், இடைகாலத்தில் அது பறிக்கப்பட்டு, தற்காலத்தில் மீண்டும் உறுதிசெய்யப்படுவதென்பது ஒரு பார்வை. இதை மறுத்து தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் தொடர்ந்து ஆண் ஆதிக்கதுக்கு உட்பட்டே இருந்தனர் என்றும் தற்காலத்திலேயே பெண் உரிமைகளில் பெரும் மாற்றம் நிகழுகின்றது என்பதும் இன்னோர் பார்வை.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க ஆக்கங்கள் பெண் புலவர்காள் செய்யப்பட்டவை. மொத்த புலவர்களுடன் ஒப்புடுகையில் பெண்களின் பங்கு மிகச் சிறிதே. எனினும் இது ஒரு பெண்கள் அக்கால சமூகத்தில் கல்வி, கலைகள் ஆகியவற்றில் மேன்மை பெறமுடியும் என்பதைக் காட்டுகிறது.

தமிழ்ச் சமூகத்தில் உள்ள பெண் தெய்வ வழிபாடும், பெண்கள் இழிவு நிலையில் வைத்திருக்கப்படவில்லை என்பதற்கு சான்றாக கொள்ளப்படுகிறது. பெரும்பான்மைச் சமயங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டை இறையை ஆணாக மட்டும் சித்தரிக்கையில், பெண் தெய்வ வழிபாடு ஒரு வேறுபட்ட சிந்தனையை சுட்டி நிக்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக